கிராமங்களில் கொரோனா அலை! அதிமுக விஞ்ஞானிகள் காலத்தை வீணடிக்கின்றனர் – மு.க.ஸ்டாலின்

கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும், சமூக பரவல் இல்லை என்று அதிமுக விஞ்ஞானிகள் காலத்தை வீணடிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரசால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும், சமூக பரவல் இல்லை என்று அதிமுக விஞ்ஞானிகள் காலத்தை வீணடிக்கின்றனர் என்றும், கிராமங்களை தயார்படுத்தாவிடில், பேராபத்து ஆகிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.