கேரளாவில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு -முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனாவிற்கு 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில்  46,433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,568 ஆக அதிகரித்துள்ளது. 12,727பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.ஆனால் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு பரவிய மாநிலம் கேரளா ஆகும்.நாளடைவில் அங்கு கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது.  

கடத்த 2 நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது.இந்நிலையில் தான் இன்று கேரளாவில் கொரோனாவிற்கு 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இதனால் தற்போது 37 பேர் அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.இன்று யாரும் கொரோனாவில் இருந்து மீளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.