ஆந்திராவில் மூன்றவாது நாளாக 1000-ஐ தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை.!

ஆந்திர மாநிலத்தில் 24 மணிநேரத்தில் 1,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நேற்று ( புதன்கிழமை) தகவல் வெளியானது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஆந்திராவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.  24 மணிநேரத்தில் 1,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நேற்று ( புதன்கிழமை) தகவல் வெளியானது. இதனால், ஆந்திராவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது, 22,259 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வெளியான அறிக்கையில், 24 மணி நேரத்தில் 12 கொரோனா  நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா இறப்பு எண்ணிக்கையானது 264 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.