#BREAKING : அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டில் கொரோனா சிகிச்சை – தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கான சிகிச்சை சேர்த்து தமிழக அரசு அறிவித்துள்ளது .

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.முதலில் ஊரடங்கிற்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தாலும் தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு  உள்ளதால் அங்கு மட்டும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சையும் இணைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையும் காப்பீடு கொரோனா காரணமாக மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.