மளிகை, காய்கறி கடைகளில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை – மத்திய அரசு

மளிகை, காய்கறி கடைகளில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை.

இந்தியா முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அணைத்து மளிகை, காய்கறி கடைகளிலும் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த, மணிலா அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சந்தைகள் இருக்கும் பகுதி, முதியோர் இல்லம், குடிசை வாழ் பகுதி போன்றவற்றிலும் பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.