#Breaking : இந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.!

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில்  இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.

சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாய்வில் தொடங்கியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அந்ததந்த மாநில அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா அறிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment