இ-பாஸ் முறையால் தான் கொரோனா பரவல் கண்டுபிடிக்க முடிக்கிறது .!

நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், ராணிப்பேட்டை மற்றும்  திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து  ஆய்வு மேற்கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, இன்று முதலமைச்சர் பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாமக்கல்லில் மாவட்ட வளர்ச்சி பணி மற்றும் கொரோனா தடுப்பு பணிஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவே இ-பாஸ் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை எனவே பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

மேலும், இபாஸ் முறையால் தான் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. இபாஸ் இல்லை என்றால் கொரோனா யாரால் பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது என தெரிவித்தார்.

author avatar
Castro Murugan