சென்னையிலிருந்து வருவோரால் கொரோனா அதிகரிக்கிறது..மக்கள் கவனமாக இருங்கள்.!

சென்னையிலிருந்து வருவோரால் புதுச்சேரியில் கொரோனா அதிகரிக்கிறது என -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

சென்னையிலிருந்து வருவோரால் புதுச்சேரியில் கொரோனா அதிகரிக்கிறது மக்கள் எச்சிக்கையாக இருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.  மேலும் தமிழகத்தில் இருந்து வருவோருக்கு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று இருப்பவர்களிடமிருந்து நோய் தோற்று பரவுவதால் புதுச்சேரி மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.