தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்!

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார்

தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். இவர் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார். அதேபோலவே, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அவருக்கு பதில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மீண்டும் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை பொறுப்பேற்பார் எனக்கூறிய நிலையில், தற்பொழுது அவர் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றார். இவர், 2012 – 2019 ஆம் ஆண்டுகளில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.