புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 7ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தென்னிந்தியாவில் புதுச்சேரியில் மட்டும் தான் கொரோனாவால் பாதிப்பு குறைவாக  உள்ளது.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லிருந்து 7ஆக உயர்ந்துள்ளது.இவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan