புதுச்சேரியில் புதிதாக 642 பேருக்கு கொரோனா தொற்று..! 4 பேர் உயிரிழப்பு..!

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 642 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  4 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,648 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,516 பேருக்கு சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 642 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் 496, காரைக்காலில் 110, ஏனாம் பகுதியில் 22, மாகியில் 14 என மொத்தம் 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் … Read more

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,759 பேருக்கு கொரோனா தொற்று – 29 பேர் உயிரிழப்பு..!

கொரோனாப்பரவலின் இரண்டாவது அலை புதுச்சேரியில் அதிகரிக்க  தொடங்கியுள்ளது. தினமும் இந்த உருமாறிய கொரோனாவை எண்ணி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,759 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. மேலும், 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,007 பேருக்கு கொரோனா பரிசோதனை இன்று புதிதாக  மேற்கொண்டுள்ளனர். புதுச்சேரியில் மட்டும் 1,365 பேருக்கும், காரைக்காலில் 218 பேருக்கும், யாணம் பகுதியில் 120 பேருக்கும், … Read more

புதுச்சேரியில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பா? நாளை அமைச்சரவையில் முடிவு!

புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு, நாளை முதல் முடிவடைகிறது. இதன்காரணமாக, அம்மாநிலத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து நாளை அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கொரோனா தொற்று இல்லை!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென அதிகாரிகள் தெரிவித்தனர். புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்காரணமாக ஆளுநர் அலுவலகம், நேற்று முதல் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை … Read more

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா.. 2 நாட்களுக்கு மூடல்!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான  நிலையில், ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், கடந்த 24 மணிநேரத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. … Read more

ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறிய புதுச்சேரி!

புதுச்சேரியில் கொரோனவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்த நிலையில், ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியது. புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த அம்மாநிலம், தற்பொழுது … Read more

அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமை .!

புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அம்மாநில முதல்வர்  நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் வெளிமாநிலத்திற்கு அனுமதியுடன் சென்று வந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் , குடியரசு துணைத் தலைவர் … Read more

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 7ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனா வைரஸால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தென்னிந்தியாவில் புதுச்சேரியில் மட்டும் தான் கொரோனாவால் பாதிப்பு குறைவாக  உள்ளது. இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5லிருந்து 7ஆக உயர்ந்துள்ளது.இவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு … Read more

தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கடை திறப்பு நேரக்குறைப்பு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 லிருந்து 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 லிருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் 05 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 01 கொரோனாவால்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க  சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையெடுத்து புதுச்சேரியில் நாளை முதல் காலை 6 மணி … Read more

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா.!

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற திருவண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.