ஹைதராபாத்தில் 25 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா.!

கடந்த நான்கு நாட்களாக, ஹைதராபாத்தில் உள்ள பழைய செயலக கட்டிட வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா  பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று  25 பத்திரிகையாளர்களுக்கு வேறு சில மருத்துவமனைகளில் சோதனையின் போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், அம்மாநிலத்தில் மொத்த கொரோனா  பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 70 -ஐ எட்டியுள்ளதாக ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில், மொத்த பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 4974 உள்ளது. இதுவரை 2377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் , 185 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
murugan