கொரோனா எதிரொலி: சிறை கைதிகளுக்கு பரோல் – உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய , மாநில  வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளை குறைக்க மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 

கொரோன முன்னெச்சரிக்கையாக சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் குழு அமைத்து பரோல் பற்றி முடிவெடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்