கொரோனா உறுதி.. உத்தரகண்ட் முதல்வர் வீட்டில் தனிமை..!

உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் தனது பதிவில், இன்று நான் கொரோனாவை பரிசோதித்தேன், அறிக்கை பாசிட்டிவ் என வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது மற்றும் அறிகுறிகள் எதுவும் இல்லை. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். கடந்த சில நாட்களில் யார் என்னுடன் தொடர்பு கொண்டார்களோ, தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி உங்கள் பரிசோதனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan