படப்பிடிப்பின் போது பிரித்விராஜுக்கு கொரோனா உறுதி..!

பிருத்விராஜ் “ஆடுஜீவிதம்” படப்பிடிப்பு முடிந்த பின்னர் சமீபத்தில் ஜோர்டானிலிருந்து திரும்பினார். பின் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிருத்விராஜ் புதிய படமான ‘ஜன கண மன’  படப்பிடிப்பில் நடிக்க சென்றார்.

ராணி படத்திற்குப் பிறகு திஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய படம் ‘ஜன கண மன’  படத்தின் முதல் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று  நிறைவடைந்தது. முதல் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு கொரோனா சோதனை செய்தபோது பிரித்விராஜுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால், தற்போது கொச்சியில் உள்ள அதே ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறார். இதன் மூலம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. படத்தின் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரித்விராஜ் வெளியிட்ட அறிக்கையில், நான் தனிமையில் இருக்கிறேன்.நலமாக இருக்கிறேன் என்னுடன் தொடர்பிலிருப்பவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவில் குணமாகி வேலைக்குத் திரும்புவேன் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan