திருப்பூரில் இன்று மட்டும் 35 பேருக்கு கொரோனா உறுதி.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தண்டியுள்ளது. இன்று மட்டும் திருப்பூரில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று 1000-ஐ தண்டியுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்து, 11 ஆக அதிகரித்துள்ளது. 50 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்ட 106 பேரில் அதிகபட்சமாக திருப்பூரில் 35 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியானது. ஏற்கனவே 25 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 60 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து  கோவையில் இன்று மட்டும் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 97 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு 119 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று சென்னையில் மேலும் 18 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு 199 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தான் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாகும் இருக்கிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்