தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ,இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பின் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்பு அவர் வாபஸ் பெற்ற நிலையில் ,கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலாக வழக்கை நடத்த அனுமதி கோரி வாக்காளர் முத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு இடையில் ,திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார்.அந்த வழக்கின் விசாரணையில், ,அவரது வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில் இன்று தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி திமுக எம்.பி. கனிமொழி மனு தாக்கல் செய்தார் .இந்த வழக்கில் முத்துராமலிங்கம்,தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வழக்கினை மார்ச் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…