காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையிலேயே அக்கட்சியினருக்குள் கைகலப்பு!

  • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. 
  • இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.

அந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் பெயர் வாசிப்பின் போது ஒரு பிரமுகரின் பெயரை வாசிக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது அந்த பிரமுகரின் ஆதரவாளர்கள் கூச்சல் எழுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.