ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு !குழுவுடன் இணைந்து சரி செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.நாளை (மே 12 ம் தேதி)  மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதனால் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹிமாச்சல் பிரதேசம் சென்றார்.அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டது.இதனால் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய ஹெலிகாப்டரில் இருந்த குழுவினர் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் ராகுல்காந்தியும் அவர்களுடன் இணைந்து ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்துள்ளார்.இந்த புகைப்படத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment