குழந்தை விற்பனை விவகாரம் : சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை

30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்திவருகின்றனர்.சிபிசிஐடி விசாரணையில் ,ராசிபுரம் பகுதியில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டது.

30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .குழந்தைகள் வாங்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட பெற்றோர்களிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.கொல்லிமலை, ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதிகளில் குழந்தைகளின் பிறப்பு பதிவேட்டினை ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கை மூலமாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர் சிபிசிஐடி போலீசார்.

Leave a Comment