இமாச்சலில் நீங்கள் நினைப்பது தவறு.! உறுதியான ஆட்சியை அமைப்போம்.! காங்கிரஸ் தலைவர் உறுதி.!

இமாச்சலில் உறுதியான ஆட்சியை அமைப்போம். நாங்கள் பெரும்பான்மையை நோக்கிச் செல்கிறோம். – காங்கிரஸ் தலைவர் பவன் கேரா.

குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் குஜராத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் பெரும்பலான இடங்களை கைப்பற்றி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் காலையில் இருந்து பாஜக – காங்கிரஸ் இடையே இழுபறியாக இருந்து வந்தது

இதில் தற்போது 68 தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. 25 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதுகுறித்து இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கருத்து தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் இழுபறி ஆட்சி எல்லாம் கிடையாது. இமாச்சலில் உறுதியான ஆட்சியை அமைப்போம் எனவும், நாங்கள் பெரும்பான்மையை நோக்கிச் செல்கிறோம் எனவும் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment