தமிழிசை உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம்…! பொறுத்திருந்து பாருங்கள்…! – ஓ.எஸ்.மணியன்

தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநரான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், நேற்று புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.

நாகப்பட்டினத்தில் ஓ.எஸ்.மணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழிசை சௌந்தரராஜன் உடலில் ஓடுவது காங்கிரஸ் இரத்தம். தற்போது பாஜக அரசால், கவர்னராக நியமன செய்யப்பட்டுள்ளார். அவரது ஹெயல்களை பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.