நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து ..!

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாடுகளிலும், குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக ஒவொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், நவ 14ம் தேதி முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடுகிறோம்.

இந்நிலையில் முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர்  கூறுகையில்,  நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment