கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்த மனைவி மீது புகார் ….!

பீகார் மாநிலத்தில் உள்ள ரோஹ்தாஸ் எனும் மாவட்டத்தை சேர்ந்த பர்னா  எனும் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் கழுத்தை கடித்து கொலை செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணின் லவ்லி சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையின் போது அதிக அளவு கோபம் அடைந்ததால் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தான் திருமணம் நடந்ததாகவும், இவர்களுக்கு தற்போது 10 மாத பெண் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கணவனைக் கொன்ற அந்த பெண்மணி கூட்டு குடும்பமாக இருப்பதால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த பெண்மணி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவரை கைது செய்வோம் எனவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal