மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் கலவரம், மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை உள்ளிட்ட விவகாரங்களை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியிருந்தார்.
அதன்படி, இன்று (ஜூன் 25) விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.