12 கோடி செலவில் அதிநவீன ஐஸ் கிரீம் ஆலை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

சேலத்தில் ஆவின் பண்ணை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஐஸ்க்ரீம் ஆலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சேலத்தில் செயல்படும் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தமிழக அரசனது 12 கோடி ரூபாய் செலவில்  அதிநவீன ஐஸ்கிரீம் ஆலை ஒன்றை புதியதாக அமைத்துள்ளது.

இந்த அதிநவீன ஐஸ் க்ரீம் ஆலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை  தலைமை செயலகத்தில் இருந் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

இந்த அதிநவீன ஐஸ் க்ரீம் ஆலையினால் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment