தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் புதிய நிலக்கரி இயந்திரத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தூய்மை பணியாளருக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு மேலும், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் புதியதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலக்கரி இறக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும் தொடங்கி வைத்தார்.
325 கோடிக்கு புதிய இயந்திரம் : தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்திற்கு தற்போது புதியதாக நிலக்கரி இறக்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு சார்பில் சுமார் 325 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த புதிய இயந்திரத்தின் செயல்பாடுகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
80 கோடி ரூபாய் சேமிப்பு : இந்த 325 கோடி ரூபாய் புதிய நிலக்கரி இறக்கும் இயந்திரம் மூலம் அதிக திறன் கொண்டு நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடியும். இதன் மூலம் 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் டன் வரையில் நிலக்கரிகளை இறக்குமதி செய்ய முடியும். ஒரு டன்னிற்கு (1000 கிலோ) 700 ரூபாயில் இருந்த செலவானது தற்போது 500 ரூபாயாக குறையும். இதன் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வருடத்திற்கு 80 கோடி ரூபாய் அளவிற்கு சேமிப்பு கிடைக்கும் எனவும் கூடுதல் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…