அக்டோபர் 28-ம் தேதி இறைச்சி கடைகள் மூடல்..!

சமண மதத்தை தோற்றுவித்த  மகாவீர் நிர்வான் நாள் இந்தியா முழுவதும் அக்டோபர் 28-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.அன்றைய தினத்தில் ஆடு, மாடு போன்ற இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து இறைச்சி கடைகளும் , வணிக வளாகங்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளையும் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் அரசு உத்தரவை  செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும்  ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

author avatar
murugan