மே 17-ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடல் – கேரள அரசு

 கேரளாவில் மே 17-ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மே 3-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு மே -17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடாகா மற்றும் ஆந்திராவில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு சில மாநிலங்களிலும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளது. 

இதனிடையே கேரள அரசு இது தொடர்பாக இன்று முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.இந்த ஆலோசனையில்  கேரளாவில் மே 17-ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.