வெகு சிறப்பாக கொண்டாட தொடங்கிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் .!

  • கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்,  கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல்கள் என தற்போது கொண்டாட்டங்களை மக்கள் தொடங்கி விட்டனர்.
  • பொது இடங்கள் , வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் அதிக செலவில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி உள்ளனர் .

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக உலகம் முழுவதும் ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றனர் . கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக  ஒவ்வொரு வீட்டிலும் கண்ணைக் கவரும் விதமாக  நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், போன்றவை வைத்து அலங்கரிக்க தொடங்கி விட்டனர்.

மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல்கள் என தற்போது கொண்டாட்டங்களை மக்கள் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் உள்ள  ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பிலும் அதற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் வீட்டிற்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல் பாட தொடங்கி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக பொது இடங்கள் , வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் அதிக செலவில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி உள்ளனர் .இதுமட்டுமல்லாமல் வீடுகளில் சிறு சிறு குடில்கள் அமைத்து வருகின்றனர்.

இதற்குத் தேவையான தருவைப் புற்களை மலையோரப் பகுதிகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் சென்று சேகரித்து வருகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதில் மின் விளக்குகளாலும் , கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பலூன்களை தொங்க விட்டு அலங்கரித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தமிழகத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெகு சிறப்பாக  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கேக்குகள் தயாரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் ஜவுளி கடைக்கு புதிய ஆடைகளையும் வாங்க தொடங்கி விட்டனர்.கிறிஸ்தவ ஆலயங்களுக்கு  வண்ணம்  பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் என தேவாலயங்கள் அலங்கரித்து வருகின்றனர்.

author avatar
murugan