சென்னை விமான நிலையத்திலிருந்து சற்று நேரத்தில் புறப்படும் முதல்வர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து குன்னூர் புறப்பட்டார்.

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடனுக்கு புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிஹாப்டர்  காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் தரையிறங்க 5 நிமிடம் மட்டுமே இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில்,  ராணுவ விமான விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிடுவதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் புறப்படுகிறார்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோரும் செல்கின்றனர்.

author avatar
murugan