நேற்றிரவு அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் விசிட் அடித்த முதல்வர்…! வீடியோ உள்ளே…!

நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல், பல புதிய திட்டங்களை தொடக்கி வைத்தது மட்டுமல்லாமல், அனைத்து துறைகளின் பணியையும் உற்று கவனித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று தருமபுரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்குள்ள அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த காவலர்களிடம் அவர் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடம் பின் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பினார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இரவும் பகலும் காவல் காத்து சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்திடும் மகத்தான பணி காவல்துறையினருடையது! அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். வள்ளுவர் வாக்கின்படி முறைசெய்து காப்பாற்றுவோம்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.