21 எழுத்தாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் முக ஸ்டாலின்!!

21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ரூ.20,000 ஊக்கத்தொகை வாங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழகியுள்ளார். 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

மேலும், 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான ரூ.20,000 ஊக்கத்தொகையை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். எழுத்தாளர்கள் அறிவரசன், வசந்தா, ஆடலரசு உள்ளிட்டோருக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்