இன்று கல்லணையை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

  • இன்று கல்லணையை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
  • நாளை 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.

கல்லணை கால்வாயில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு வசதியாக  சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக, இன்று சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கல்லணை கால்வாய்க்கு செல்கிறார்.

அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதைத்தொடர்ந்து, நாளை 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரை திறந்து வைக்கவுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.