தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த தெலுங்கானா முதல்வர்.!

தெலுங்கானாவில் புதியாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானாவில் மாநில அரசு, புதிய தலைமை செயலகத்தை கட்டி முடித்துள்ளது. அதன் திறப்பு விழா வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்தார்.  இதனை தொடர்ந்து, பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள விழாவுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment