கோவையில் முதல்வர் : நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

கோவையில், வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2 நாள் பயணமாக கோவை மற்றும் திருப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், கோவையில், வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில், ரூ.441.76 கோடி மதிப்பில், 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.ரூ.596 கோடி மதிப்பில் 67 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.89.73 கோடி செலவில் முடிக்கப்பட்ட திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து  கொண்டுள்ளனர். இந்த நிகழ்விற்கு பின், மாலை திருப்பூர் செல்வார் எனக் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.