ஆந்திராவில் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

ஆந்திராவின் ரேணிகுண்டா ரயில் நிலைய காவல்நிலையத்தில் தலைமை காவலர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை.

ஆந்திராவின் ரேணிகுண்டா ரயில் நிலைய காவல்நிலையத்தில் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தலைமை காவலர் ஆனந்த் ராவ் அலுவலக ஸ்டார் ரூமில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக நகர்புற போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்ததாக ரேணிகுண்டா நகர காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமை காவலர் ஆனந்தராவின் சொந்த ஊர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிந்தலாபுரி கிராமம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தற்கொலை பற்றிய முழு விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்