“வெந்து தணிந்தது காடு” தலைப்புக்கு நியாயம் செய்யும் படைப்பாக இருக்கும் – ஐசரி கணேஷ்.!

வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியுள்ளார். 

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியது ” “வெந்து தணிந்தது காடு’ படம் இதுவரை சிம்பு செய்திராதது. அவரது அணைத்து நடிப்பைபும் ஒரே படத்தில் வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும். இந்த படத்தின் கதையை இயக்குநர் கௌதம் மேனன்  என்னிடம் கூறும்போது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவரது வழக்கமான கதைகளில் இருந்து வேறு விதமான திரைக்கதையை கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

தலைப்புக்கு நியாயம் செய்யும் படைப்பாக 100 சதவீதம் இப்படம் இருக்கும். இந்த படத்தின் திரைக்கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 6 அன்று படப்பிடிப்பு, திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.