செஸ் ஒலிம்பியாட் – ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக  செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த  நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி  வந்ததது. ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 187 நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக  செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment