#BREAKING: சேப்பாக்கம் மைதானத்தை ரூ.139 கோடியில் புதுப்பிக்க அனுமதி – அரசு அறிவிப்பு..!

ரூ.139 கோடியில் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு 18 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.  நீர்நிலை மற்றும் நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் நடைபெற கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிடலாம். விரிவாக்கம் விரிவான திட்ட அறிக்கையுடன் புதுப்பித்தலுக்கு கடந்த டிசம்பரில் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி அரசு பள்ளி மாணவர்கள் திறனை மேம்படுத்த சேப்பாக்கம் மைதானம் நிர்வாகம் ரூ. 20 லட்சம் வழங்கிறது. அடையாற்றில் தூய்மைப்படுத்த ரூ.25 லட்சமும்,  பக்கிங்காம் கால்வாயை தூர்வார சேப்பாக்கம் மைதானம் நிர்வாகம் சார்பில் ரூ.25 லட்சம் வழங்கப்பட உள்ளது.

 

author avatar
murugan