சென்னை ரயில் நிலையம் அருகே நகை திருட்டு….!!!

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி சேர்ந்தவர் யசோதா. இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, கடந்த 6ம் தேதி சென்ரல் ரயில் நிலையம் வந்தார். அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால், அவர் அங்கேயுள்ள மார்க்கெட்டில் ரயில் நிலையத்தின் 15வது மேடையில் படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் படுத்து உறங்கும் போது அவர் அருகே இரண்டு பெண்கள்  உறங்கியுள்ளனர். இதனையடுத்து அவர் உறங்கி எழுந்து பார்த்த போது அவர் கழுத்திலிருந்த 23 பவுன் மதிப்புள்ள தங்க நகையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதே நிலையில் தன் பக்கத்தில் படுத்திருந்த 2 பெண்களும் மாயமாகியிருந்தனர்.
இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ரயில் நிலையத்தில் ரஞ்சனா என்னும் பெண் தனது 16 வயது மகளுடன் சுற்றி திரிந்துள்ளார். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தான் நகையைதிருடியது அவர் தான் என்று அவர்களே ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து நகையே மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment