சென்னை சட்ட பேரவைத் தொகுதி வாக்கு பதிவு குறித்த புள்ளி விபரங்கள் வெளியீடு…!

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கோவிந்தசாமி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமான்ர தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதி வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 16 தொகுதிகளில்  ஆன்,பெண் மற்றும் 3-ம் பாயலினத்தவர்களை சேர்த்து மொத்தம் 40.57 லட்சம் வாக்களர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். சென்னையில், 5,911 வாக்குச்சாவடிகள், 9,847 ஈ.வி.எம் கருவி, 7,32 கட்டப்பட்டு கருவிகள் மற்றும் 7.474 வி.வி.பெட் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 90 பேருக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலை கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் வாக்கு எண்ணப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.