சென்னையில் ஒரே நாளில் ₹15.5 லட்சம் அபராதம் வசூல் – போக்குவரத்து காவல்துறை

சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல். 

சாலை விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில், நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.15.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை போக்குவரத்துத்துறை காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment