சென்னை உட்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சுற்றுவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.அதன்படி கண்ணமங்கலம், ரெட்டிபாளையம், புதுப்பேட்டை, காட்டுக்காநல்லூரில் ஆகிய இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

author avatar
murugan