புதுச்சேரியில் நீட் தேர்வு ரத்து செய்ய முகாந்திரம் இல்லாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது-முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் தற்போது புதிதாக தேர்வு முறையையும், தேசிய மருத்துவ கவுன்சில் அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது.

மேலும்  புதுச்சேரியில் நீட் தேர்வு ரத்து செய்ய முகாந்திரம் இல்லாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் அமைப்பதன் மூலம் புதுச்சேரி, தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர் என்று புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.