#Breaking:பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீடு – தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர் முதலிடம்…!

  • கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.
  • தமிழ்நாடு,பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் A++ தரக் குறியீடு பெற்று முதலிடம்.
கடந்த 2017 -18 ஆம் கல்வி ஆண்டை அடிப்படையாக கொண்டு,பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டை, ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில்,தற்போது 3-வது முறையாக 2019-20 ஆம் ஆண்டுக்கான தரவரிசை குறியீட்டை,மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.
அதன்படி,பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு,சண்டிகர்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள்,அதிக தரவரிசை குறியீட்டை பெற்று முதலிடத்தில் இருப்பதாக,அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
  • அதில்,தமிழ்நாடு,பஞ்சாப், சண்டிகர்,அந்தமான் நிக்கோபார் போன்ற மாநிலங்கள் அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இடத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • அதாவது,மாநிலங்களின் செயல்பாடு அடிப்படையில், அவற்றின் தரவரிசை A, A+, A++ என வகைப்படுத்தப்படுகிறது.
  • அந்த அடிப்படையில் தமிழ்நாடு, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களின் செயல்பாடுகளுக்கு A++ என தரக் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாகவும்,
  • மேலும்,புதுச்சேரி, மணிப்பூர் அருணாச்சல பிரதேசம் கடந்த ஆண்டை காட்டிலும் தரவரிசை குறியீட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.