சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைதான சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 4 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனையிட சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.