பணபட்டுவாடா திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு..!

நாங்குநேரி தொகுதியில் உள்ள மூலக்கரை பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில் திமுகவினர் வீட்டை வாடகைக்கு எடுத்து பணப்பட்டுவாடா செய்ததாக ,அதற்கு ஏற்றார் போல வாக்காளர் பட்டியல் தயார் செய்தததாகவும் கூறிப்படுகிறது.
அப்பொழுது பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்ட திமுகவினர் அப்பகுதி மக்கள் சிறைபிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த  தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நாங்குநேரியில் முறைகேடாக பணம் வைத்திருந்த திமுக எம்எல்ஏ சரவணகுமார் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுகவினரை  தாக்கி பணம் , செல்போன் பறித்ததாக கூறி 24 பேர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.
நாங்குநேரி திமுக ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை  அளித்துள்ளார்.அதில்  எம்எல்ஏ சரவண குமார் உள்பட 7 மேற்பட்டோரை தாக்கி பணம் , செல்போன் பறித்ததாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan