UPI மூலம் தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? திரும்ப பெற என்ன செய்யலாம்?

UPI

UPI மூலம் தவறான மொபைல் எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால், நீங்கள் அதை எவ்வாறு திரும்பப் பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்கள் என்பது அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. அதில், இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுபிஐ (UPI-யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அனைவரும் பயன்படுத்துகின்றனர். யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் UPI (யுபிஐ) இணைக்கப்பட்ட தங்கள் மொபைல் எண் மூலம், தவறான வங்கிக் கணக்கிற்குத் தவறுதலாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில், … Read more

இலவச வேட்டி சேலைக்கு பதில் 500 ரூபாய் பணம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு

பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்கள் அறிவிப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தகளுக்கு புதுச்சேரி அரசு பரிசு பொருட்களை அறிவித்துள்ளது. அதன்படி, குடும்ப அட்டையில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய நபர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.500 பணம், இலவச வேட்டி சேலைக்கு பதிலாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மது வாங்க பணம் தராததால் தாயை தீ வைத்து கொளுத்திய நபர்..!

கேரளாவில், மது வாங்க பணம் தராததால் தனது 75 வயது தாயை தீ வைத்து கொளுத்திய நபர் கைது. கேரளாவின் திருச்சூரில் 55 வயது நபர் ஒருவர் மதுபானம் வாங்க பணம் தர மறுத்ததால் 75 வயதான தனது தாயை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மதுபானம் வாங்குவதற்கு பணம் தர மறுக்கும் போது அந்த நபர் தனது … Read more

வரலாறு காணாத வகையில் சரிந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 77.02 ஆக இருந்தது. அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு கடந்த வாரம் 76.22 ஆக இருந்தது.

அமெரிக்காவில் காற்றில் பறந்த வங்கி பணம்..!கைநிறைய அள்ளி சென்ற மக்கள்..!

அமெரிக்கா சாலையொன்றில் வங்கி பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தின் கதவு திறந்து காற்றில் பணம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்து பணத்தை எஃப்.பி.ஐ-க்கு எடுத்து செல்லும் டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து … Read more

“அரசுப் பணம் வீண்;மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல”- ஓபிஎஸ்..!

மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதெல்லாம் மாநில அரசின் கடமை: “சாலைகளின் இருமருங்கிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில … Read more

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது – பாஜக எம்.பி!

டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் உண்மையான விவசாயிகளே கிடையாது, அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என பாஜக எம்.பி அக்‌ஷய்வர் லால் கோண்ட் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விமர்சித்த உத்தரபிரதேச மாநிலம் பரைச் தொகுதி பாஜக எம்பி அக்‌ஷய்வர் லால் கோண்ட் அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவது விவசாயிகள் அல்ல, அவர்கள் சீக்கியர்கள் … Read more

ஏ.டி.எம்.-இல் தவறவிடும் வைஃபை கார்டுகள் திருடி பணம் கொள்ளை..!

ஏ.டி.எம்-இல் தவறவிடும் வைஃபை கார்டுகளை பயன்படுத்தி பல்லாயிரங்களை கொள்ளையடித்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகரா. இவர் அங்கு இருக்கக்கூடிய ஏ.டி.எம். சென்றுவிட்டு திரும்பும் போது தவறுதலாக அவருடைய வைஃபை கார்டை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த வைஃபை கார்டில் 25,000 பணம் எடுத்திருப்பதாக மனோகராவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசார் விசாரணை … Read more

30 ஆண்டுகளாக தர்மம் எடுத்த பெண்ணின் வீட்டில் 2.60 லட்சம் பணம்!

30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் தர்மம் எடுத்து வந்த பெண்ணின் குடிசையிலிருந்து 2.60 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குடிசையில் வசித்து வரக்கூடிய பெண்மணி ஒருவர் தர்மம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண்மணியை அழைத்து செல்வதற்காக நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள முதியோர் காப்பக ஊழியர்கள் அவரது வீட்டிற்கு அப்பெண்மணியை அழைத்து செல்வதற்காக வந்துள்ளனர். மேலும்,  அவரது குடிசையிலிருந்து … Read more

ரூபாய் நோட்டு மூலம் கொரோனா வைரஸ் பரவும் – மத்திய ரிசர்வ் வங்கி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும், இந்த வைரஸை அழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியா இரண்டாவது இடத்தில்  உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகத்துக்கு அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைமைப்பான சிஏஐடி (CAIT) ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா … Read more