இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? – கனிமொழி எம்.பி

இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? என கனிமொழி எம்.பி கேள்வி. 

திருவைகுண்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘திருவைகுண்டத்தில் உள்ள  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கி கிளை வங்கியில், மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் திரையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியும் ஆங்கிலமும் தெரியாதவர்கள் வங்கியைப் பயன்படுத்தமுடியாதா? யாருக்காக இந்த அறிவிப்புகள்.’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.